Wednesday, October 29, 2014

மாற்றமில்லை!

நிலவற்ற
அமைவாசை போன்றே
என் வாழ்க்கை இப்போதும்

விடை தெரியாத விடுகதையாக
பயமுறுத்துகிறது
எதிர்காலம்!

தாயே!
நீயில்லாத இந்த உலகம்
பத்தாண்டுகள் கழிந்தும்
துன்பம் மாறாமல்..
அதுபோன்றே
எனக்குள் துளி சந்தோசமும் நீளாமல்!

மரணத்துள்
சுகமாக நீ தூங்குகின்றாய்
நானோ தினமும்
கண்ணீருக்குள் மூழ்குகின்றேன்!

அரக்கர்கள் வாழும்
இந்த உலத்தில்ல்
இனியும் வாழ
அச்சப்படுகின்றேன்..
இனி நீ போன
பாதைதான் எனக்கும்
மிச்சப்படுகின்றது!

ஒய்யரமாய் நான்
நடந்து போவதாய்
பலரும் எண்ணக்கூடும்
என் கால்களின் நடுக்கத்தை
காணாததால்!

தெரியுமா உனக்கு?
இந்த உலகில் இறைவன் படைத்த
வானம் பூமி கடல் மலை
எதுவும் இன்னும் மாறவில்லை
மாறவேயில்லை
என் வாழ்க்கையைப் போலவே!