வலை வீசி கஷ்டப்பட்டும்
வருமானத்தைக் காணோம்...
விலைவாசி ஏற்றத்தால் நாம்
வழியிழந்து போனோம்!
எங்கள் அடுப்புக்கள்தான்
எரியவில்லை - ஆனால்
வயிறெரிகிறது
பசியாலும், ஆத்திரத்தாலும்!
கவலைப் படாதீர்கள்
என்று சொல்ல பலருண்டு - எனினும்
வழிவகையைக்
காட்டித் தருவோர் எவருண்டு?
இருட்டில் நிகழும் திருட்டுக்கள்
ஒழிக்கப்படுகின்றன..
பகலில் நிகழும் திருட்டுக்கள்
அழிக்கப்படுகின்றன!
இரத்தத்தை உறிஞ்சுவது
அட்டைகள் மாத்திரமல்ல
அட்டையர்களாய்
பலரிருக்கின்றனர்!
நாங்கள் மனிதர்கள்
தோளேறி சவாரி செய்ய
கழுதைகளல்லர்!
சுனாமி
கிறீஸ் மனிதன்
எதுவும் தேவையில்லை..
எமை வீழ்த்த இந்த
விலைவாசி போதும்!!!
No comments:
Post a Comment