Thursday, June 17, 2010

ஆழ்மனசும் அதில் பாயும் அன்பலையும்!

சந்திப்புக்களின் சிந்திப்பால்
அலை பாய்ந்த மனது
உனைக் கண்டதும்
பிரமித்தே விட்டது!

கார்த்திகை வந்தால்
காந்தள் மலர்கிறது!
நீ வந்தால் - மனதில்
கவிதை
உதிக்கிறது!

காதல்
கனியும் என்று
காத்திருந்தும் - அது
காயங்களைத் தான்
தந்து போனது!

கண்ணிறைந்த காதலனே!
அன்பை ஏற்று - நீ
ஆதரவு தராவிடினும்..
அடுத்தவர்க்கு
நம் காதலை
எத்தி வைக்காதே!

ஏனெனில்
சமூகம்
கத்தி வைக்க
காத்திருக்கிறது!!!