Thursday, June 28, 2012

பொய்மை!


என் ஏணியாக நீயும்
உன் ஏணியாக நானும்
பொறாமையின்றி வாழ்ந்த
காலங்கள்
கனவு போல இருக்கிறது!

உன் ஞாபகங்கள்
என்னை
ஆட்டங் காணச் செய்கிறது..
உன் பிரிவு
என்னை தடுமாற வைக்கிறது!

கூட்டத்திலும் தனிமையிலும்
உன் முகம் தெரிகிறது..
பகிர்ந்து கொள்ளவியலா
சோகங்களால்
உடலும் மனதும் எரிகிறது!

புன் சிரிப்பு தொலைந்து
அகம் முழுதும்
புண்களாக வலிக்கிறது..

பிறரின் சிரிப்புக்கு
என் உதடுகள்
போலியாக சிரிக்கிறது!

உதிரும் இலைகளாகவும்
துளிர்க்கும் இலைகளாகவும்
மாறி மாறி - உன்
நினைவுகள் நெருடுகின்றன!

ஒவ்வொரு நாளும்
எதிர்பார்க்கிறேன்
உன் வருகையை.. ஆனால்
அவை தருகின்றன
சதாவும் பொய்மையை!!!

No comments: