Sunday, May 22, 2011

காலங்களின் பிடிக்குள்!


இளையவள் என்
வளையல் ஓசையில்
உன் இதயம்
சிக்கிக்கொண்டதாய்
சொன்னாய்!

நான் சிரிப்பதால் தான்
பறவைகள்
இறக்கை விரித்துப் பறப்பதாய்
சொன்னாய்!

அழகிய ரோசாவை
நட்டுவிடக்கூடிய
அழகிய இடம்
என் கன்னக்குழி என்றாய்!

இவற்றைக்கேட்டு
என் உள்ளம்
உன் ஞாபகங்களால்
நிறைந்துவிட்டது!

என் இதயப் பூந்தோட்டத்தில்
பூக்கள் நிறையவே
பூக்கத் தொடங்கின!

உன் அன்பால் கட்டுண்டுதான்
போனேன் நானும்!

எனினும்..
பணத்துக்கு ஆசைப்பட்ட நீ
கொழுத்த சீதனம் தின்று
பங்களா வீட்டின் எசமான்
என்ற பெயரில்
வேலைக்காரனானாய்!!!

சாலையோரத் தேடல்! அல்லது தொலைத்த கவிதை!

அந்த சாலையில் தான்
தொலைத்துவிட்டேன்
என் கவிதைகளை!

இப்போதுகளில் அதை
கண்டுபிடிக்கவே முடியவில்லை..
கண்டு பிடிக்க வழியுமில்லாதபடி
நான் வெகுதூரம் வந்தாயிற்று
அந்த சாலையைவிட்டு!

மனசு கனக்கிறது
இதயம் வெடிக்கிறது
புதுக்கவிதை வாசத்தில் நான்
சிறகடிக்க நினைத்தாலும்
என்னை
கைவிடாதபடி பற்றியிருக்கிறது
மரபுக் கவிதை!

வியர்வையில்
தேடுகிறேன் உயர்வை..
பழைமையிலிருந்துகொண்டு
பார்க்கிறேன் புதுமையை..
ஏனெனில்
கனவுலகில் மிதக்கும்
கற்பனைக் கவிஞன் நான்!

உண்மையில்
அந்த சாலையில் தான்
தொலைத்துவிட்டேன்
என் கவிதைகளை..
யாராவது கண்டுபிடித்தால்
சொல்லி விடுங்கள்!!!

வாழ்க்கை பூங்காற்று!


உலகத்தின்
உறக்கத்தில் உண்மையும்
அமைதியாக
சயனித்துக் கிடக்கிறது!
பொய்யோ..
விழித்துக்கொண்டு
ஆர்ப்பாட்டம் புரிகிறது!

துயரங்கள் எங்கும்
பரவிக்கிடக்கிறது..
சந்தோஷங்களோ
சற்றும் அசைவின்றி
சமாதியாகி விடுகின்றது!

பூஞ்சோலையாக
மலர வேண்டிய வாழ்க்கை..
தகிக்கும் பாலையாக
நகர்ந்து செல்கிறது!

படுக்கையில் கடித்துவிடும்
மூட்டைப் பூச்சிகளாய்
துன்பங்கள் என்
தூக்கம் தின்கிறது!

பாறைகளுடன் நான்
சண்டையிட்டிருக்கிறேன் - என்
இதயக்குமுறல்கள்
இந்த உலகில்
எதிரொலிக்கவே இல்லை என்று!

ஆனால்
பூங்காற்று மட்டும் வந்து
என் காதுகளில்
ரகசியம் சொன்னது
வாழ்க்கை வாழ்வதற்கே என்று!!!

ஒப்பனைகள்!


வாக்குறுதியின்
மகிமை தெரியாதவர்களெல்லாம்
மேடைகளில்
வாக்குறுதிகளை
அள்ளி வீசுகிறார்கள்!

மனிதநேயம்
துளியுமற்றவர்களெல்லாம்
அதைப்பற்றி
கதைகதையாய்ப்
பேசுகிறார்கள்!

ஏழைகளைப் பார்த்து
நக்கலாக சிரிக்குமவர்கள்
தம் முன்னைய
வாழ்க்கையைப்பற்றி
சிந்திக்கவேயில்லை!

அகம்பாவத்தை
அகம் முழுவதும் சுமந்துகொண்டு
ஆன்மீகம் பேசுவது
வேடிக்கையாக இருக்கிறது!

மனிதத்தனமற்று
நடக்குமவர்கள்
மகான் என்று
தன்னை சொல்லிக்கொள்வதும்
வாடிக்கையாக இருக்கிறது!

அவர்களின்
முகத்திற்கும் அகத்திற்கும்
சம்பந்தமேயில்லாத பின்
ஒப்பனைகள் மட்டும் எதற்கு
அகற்றி விடட்டும்!!!


வாக்குறுதியின்
மகிமை தெரியாதவர்களெல்லாம்
மேடைகளில்
வாக்குறுதிகளை
அள்ளி வீசுகிறார்கள்!

மனிதநேயம்
துளியுமற்றவர்களெல்லாம்
அதைப்பற்றி
கதைகதையாய்ப்
பேசுகிறார்கள்!

ஏழைகளைப் பார்த்து
நக்கலாக சிரிக்குமவர்கள்
தம் முன்னைய
வாழ்க்கையைப்பற்றி
சிந்திக்கவேயில்லை!

அகம்பாவத்தை
அகம் முழுவதும் சுமந்துகொண்டு
ஆன்மீகம் பேசுவது
வேடிக்கையாக இருக்கிறது!

மனிதத்தனமற்று
நடக்குமவர்கள்
மகான் என்று
தன்னை சொல்லிக்கொள்வதும்
வாடிக்கையாக இருக்கிறது!

அவர்களின்
முகத்திற்கும் அகத்திற்கும்
சம்பந்தமேயில்லாத பின்
ஒப்பனைகள் மட்டும் எதற்கு
அகற்றி விடட்டும்!!!

தீராத மன நதி ஓட்டம்!




சொந்த மண்ணில்
எனக்கோ
சொல்ல முடியாத
சோகங்கள்
எனைச் சுற்றி..
வெந்த மனதில்
புண் கிளரும்
கொடூரமான காகங்கள்!

வெந்துபோன என்
உள்ளத்தில்
வந்துபோனவை
துன்பம் மட்டுமே..
நாதியற்ற என் நிலை
தேதி தெரியாத
முடிவை நோக்கியே!

தீர்ந்துவிட முடியாத
துன்ப ஓடைகளை
வலுக்கட்டாயமாக
கட்டுப்படுத்தினேன்...
என் கண்ணீருக்குள்
ஆயிரம் கவலைகளை
அடைகாக்கிறேன்!

சொல்லி(ல்) தீராத
சோகங்கள்
தினமும் என்னை
வாட்டுகிறது...
கேள்விக்குறியாய்
என் நிலையை
காலம் வந்து
காட்டுகிறது!

சீரான கதியினில்
என் மன நதி கடந்தாலும்
துயரச் சூரியன் சுட்டெரித்து
வரட்சியாக்கிப் போனது!

உப்பளமாய் படிந்த
சுவைகளை மாத்திரம்
பருகிவிட்டு..
அப்பளமாய்
மனசுடைத்து
கீறல் தருவதும் ஏனது???