Sunday, May 22, 2011
தீராத மன நதி ஓட்டம்!
சொந்த மண்ணில்
எனக்கோ
சொல்ல முடியாத
சோகங்கள்
எனைச் சுற்றி..
வெந்த மனதில்
புண் கிளரும்
கொடூரமான காகங்கள்!
வெந்துபோன என்
உள்ளத்தில்
வந்துபோனவை
துன்பம் மட்டுமே..
நாதியற்ற என் நிலை
தேதி தெரியாத
முடிவை நோக்கியே!
தீர்ந்துவிட முடியாத
துன்ப ஓடைகளை
வலுக்கட்டாயமாக
கட்டுப்படுத்தினேன்...
என் கண்ணீருக்குள்
ஆயிரம் கவலைகளை
அடைகாக்கிறேன்!
சொல்லி(ல்) தீராத
சோகங்கள்
தினமும் என்னை
வாட்டுகிறது...
கேள்விக்குறியாய்
என் நிலையை
காலம் வந்து
காட்டுகிறது!
சீரான கதியினில்
என் மன நதி கடந்தாலும்
துயரச் சூரியன் சுட்டெரித்து
வரட்சியாக்கிப் போனது!
உப்பளமாய் படிந்த
சுவைகளை மாத்திரம்
பருகிவிட்டு..
அப்பளமாய்
மனசுடைத்து
கீறல் தருவதும் ஏனது???
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
rimza unkall kavithaikall mika alakaakinnrana
rimza poal!
கவிதை சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்
---------------------------
நந்தினி மருதம்
நியூயாரக், 2012-07-14
Post a Comment