உனைக் கண்ட நான் முதலாய்
கனவிலும் நினைவிலும்
ஓயாத கலவரம்!
உணர்வாயோ நீ
என் நிலவரம்!
நெஞ்சமெல்லாம் நீயே
நிழலாடும் போது..
நிம்மதி என்பது
இனி எனக்கேது?
எங்கும் எதிலும்
உன் நாமம்..
அதை அணுதினம் உச்சரிக்குதே
என் சேமம்!
இதய வானில்
உதயமான இளங்கதிரே..
உன் வரவால் தான்
என் மனக்கோயில் பிரகாசமானது!
ப்ரியமானவனே..
உரித்தோடு உன்னை
வரித்துக் கொண்டேன்!
ஓரக் கண் பார்வையால்
ஒருபோதும் என்னை நீ
ஓரங் கட்டாதே!
உன்னழகைப் பார்த்து
உளமெல்லாம் வேர்த்து
உனக்காகக் கட்டினேன்
ஓர் ஆலயம்!
அதுவே நாமிருவரும்
குடிபுகும் காதற் சரணாலயம்!!!
1 comment:
There is certainly a great deal to find out about this subject.
I like all of the points you've made.
My site :: search engine optimization
Post a Comment