Saturday, January 1, 2011

சங்கீதமிசைக்கும் சமாதானப் புறா!


அண்ணார்ந்து பார்த்தேன்..

அழுதபடி காட்சியளித்தது
அகல விரிந்த வானம்!

தினமொன்றிலே
பலதடவை கேட்கும்
வெடிகுண்டுச் சத்தத்தால்
அன்றெல்லாம் ஊர்க்குருவிகளும்
 உல்லாசம் மறந்திருந்தன!

ஷெல்வீச்சைக் கேட்டே
பழகிப்போயிருந்தாலும்
எங்கள் உயிர்மூச்சு
ஸ்தம்பித்துப்போனது
உண்மை தான்!

நாலாபுறமும் நோக்கினேன்
திட்டுத்திட்டாக
இரத்தம் உறைந்து
படிந்து கிடந்தது!

முட்டிமோதின
எதிலோ என் கால்கள்!
ஓ.. துண்டாடப்பட்ட யாரோ
ஒருவரின் பாதங்கள் அவை!

அகோரமான இந்தக் காட்சியை
படமெடுத்திட இயலாமல்
ஒழிந்து கொண்டது
அப்போது என் இதயம்!

உயிர்பிழைத்த
அந்த சம்பவங்கள்
தற்போது இல்லாமல்
சங்கீதமிசைக்கிறது
சமாதான வெண்புறா!!!

No comments: