Sunday, May 11, 2008

விடியலை நோக்கி


ஓ...இளைஞனே !
உன்னை நீயே
காயப்படுத்திக்கொண்டு
ஒரு மூலையில்
ஒதுங்கிக்கொண்டால்
வெற்றி வாய்ப்புக்கள்
விலாசம் தெரியாமலே
போய்விடும் !

முட்களுக்கு
மத்தியில்தான்
ரோஜாக்களின்
ராஜாங்கம் நடப்பது
உனக்குத்
தெரியாதா...என்ன ?

முத்துக்குளிப்பவன்
மூச்சை அடக்கித்தான் ஆக வேண்டும் !
இமய சிகரத்தை
எட்ட நினைப்பவன்
கடினமான பாறைகளைக்
கடந்துதான் தீரவேண்டும் !

நெஞ்சாரத்துணிவை வளர்த்து
நம்பிக்கை நீர் பாயச்சி
விடியலை நோக்கி விழித்தெழு !
வானம் உனக்கு வசமாகும் !!

ரிம்ஸா முஹம்மத்,
வெலிகம,
இலங்கை.

No comments: