Thursday, December 30, 2010

வியர்வையின் விலை...!


தொழில் என்றாலே
சோகமாய் விடியும்
அதிகாலை...
காரணம்
முப்பது நாட்களும்
மூர்க்கதனமான வேலை!

மேலதிக வேலைகளாலும்
பெருக்கெடுக்குது
ஆறாக வியர்வை...
எனினும் வாழ்வுச் சூழலோ
இதுவரை காணவில்லை
உயர்வை!

முதலாளி வர்க்கத்துக்கு
இன்றியமையாதது
தொழிலாளர்கள் எம் பலம்...
ஆயினும்
மாத இறுதியில் கிடைப்பதோ
சொற்ப தொகை சம்பளம்!

உழைத்து உழைத்து
களைத்துப் போனாலும்
உணராரோ எம்
வியர்வையின் விலை...
எப்பாடு பட்டாலும்
தீர்ந்து விடுமா
எமைத் தாக்கும்
துன்ப அலை???

No comments: