Wednesday, January 8, 2014

சத்தமில்லாத யுத்தம்

சுமாத்ராவில் கருவூலமான
சுனாமியா நீ...
சுதந்திரமாய் இருந்த என்னை
சுக்குநூறாக்கினாய் நீ!

நேர்கோடாய் இருந்த எனை
வானவில்லாய் வளைத்துப் போட்டது நீ..
உதாசீனத்தால் உதறித்தள்ளி
உள்ளத்தை உடைத்துப் போட்டதும் நீ!

உன் பார்வை வாள் பட்டதற்கு
என்னுள் பெரிய காயங்கள்..
அந்த காயத்தினால் வெளுத்தது
போலிப் பாசத்தின் சாயங்கள்!

காதல் மந்திரத்தை கற்றுத் தந்தவனே
இதில் என்ன ஞாயங்கள்..
காதலே தெரியாதிருந்த என்னை
கண்கலங்க வைத்ததில் என்ன மாயங்கள்?

சதாவும் எனக்குள்ளே உன்
எண்ண அலைகளே அடிக்கின்றது..
துடிக்கின்ற இதயம்
இப்போது நன்றாக நடிக்கின்றது!

உனைப் பார்க்கச் சொல்லி
மனசு என்னிடம் அடம்பிடிக்கின்றது
பரவசமாய் இருந்த நெஞ்சம்
உன்னால் பஞ்சாகி வெடிக்கின்றது!!!

No comments: