Wednesday, April 30, 2008

உறுதி கொள் !

ஓ... மனமே !
உன் மாளிகையில்
ஒளியில்லையா?
ஓயாத இருட்டடிப்பா?
ஒரு போதும் கலங்காதே !

ஒரு பொழுது இரவானால்
மறுபொழுது பகலாகலாம் !
உன் இலட்சியத்தை அடைய
உறுதியுடன் போராடு !

சாதனை படைக்க முற்பட்டால்
வேதனைகளைத் தாங்கும்
மனோபலமும் தைரியமும்
கட்டாயம் தேவை என்பதை
மறந்துவிடாதே !

தொடரும்
தோல்விகளைக் கண்டு
துவண்டுவிடாமல்
துணிந்துநில் !
தொடர்ந்து செல் !!
வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் !!!

-ரிம்ஸா முஹம்மத்,
வெலிகம,
இலங்கை.

No comments: