கற்பனைகளோ தாராளம்
கவிதைகளும் ஏராளம்
பாடுகின்றேன் நான் பூபாளம்
புரியாதது ஏன் என் சுந்தரியே!
வேதனையில் வாடுகின்றேன்
உன்னைத் தானே தேடுகின்றேன்
பாசமெல்லாம் பாதியிலே
பிரிந்தது ஏன் பைங்கிளியே!
நிமிடங்கள் பல கழிந்து
தருணங்கள் பல மறைந்து
வருடங்கள் பறந்ததெல்லாம்
கொஞ்சம்கூட நினைவில்லையா?
கொடுமைகள் எனை உதைத்து
கடுமையாய் எனை வதைத்து
சோகம் தந்த வலிகளெல்லாம்
துளியளவும் விளங்கலியா?
காதலை நற்காவியமாய் பாடியும்
உனக்கென்னடி என் மேல் வெறுப்பு
நிஜத்தில் நீயென்னை விரும்பின்
அரும்பாய் மலருமே சிரிப்பு!
மருந்தாக என்னுள் நீ வந்தால்
மோட்சங்கள் பெற்று மீண்டும் பிறப்பேன்
குறும்பாகத்தான் சொல்லிப்போயேன்
அந்தக் காதலால் கவலைகள் துறப்பேன்!
நீ சென்றிட்டால் எனை விட்டுப் பிரிந்து
திரிவேன் நான் என் நிலையை மறந்து
தேகம் கிடக்கும் குற்றுயிராய் எரிந்து
அப்போ அது காகங்களுக்கும் விருந்து!
தந்திடாதே ஆழ் நெஞ்சில் காயம்
அது ஒருபோதும் ஆவதில்லை ஞாயம்
நீ தானே செய்தாய் மாயம்
எனை குறைகூறித்திரிவது அநியாயம்!
------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
No comments:
Post a Comment