Friday, February 27, 2009

காதல் சுவாலை !



கண்ணாளனே!
என் இதயத்துள்
ஒரு பிரளயம்
மௌனமாக புரள
ஆரம்பிக்கிறது..

இப் பொற்கொடியாள்
துடிப்பதை நீ
அறிவாயா?
என் அன்பே!
என் அங்கத்தை
அணுஅணுவாக
வெட்டிச் சாய்த்துக் கேள்
ஒவ்வொன்றுமே
உன் நாமத்தை
உச்சரிக்கும்!

என் விழிகள்
நூறு கடிதங்கள் போட்டும்
ஏனோ இன்னும்
பதிலைக் காணோம்!
சுவாலை விட்டெரியும்
பெரும் நெருப்பாகி விட்டது
என் காதல்....
அதில் நீ
குளிர் காயப் போவது
எப்போது?

No comments: