Friday, December 3, 2010

சாதல் நன்றே...!


அடிமனதில் புதைந்திருக்கும்
ஆசை நினைவுகள் எழுகிறதே..
கொடி இடையாள் உன் பிரிவால்
நிம்மதி என்னில் தொலைகிறதே!

நித்தம் நித்தம் என் விழியில்
ரத்தம் தான் வழிகிறதே..
யுத்தம் புரிந்து உன் எண்ணம்
வாழ்க்கையை அழிக்கிறதே!

ஏன் பெண்ணே கனவுகளிலும்
நீ வந்தாய் தவறாது..
உன் நினைவிலாவது நானில்லை
சொல் நீ - என் தவறேது?

அன்று
மழைத்துளியின் ஸ்பரிசத்தில்
உன் மலர்வதனம் கண்டேனே..
காதலாகி கசிந்துருகி
உன் ஞாபகம் கொண்டேனே!

பின்பு
வாய்ப்பு வந்த போதெல்லாம்
வாய் திறந்து பேசேனே..
உன் திருமண
செய்தி வந்தபோது
என் தவறை உணர்ந்தேனே!

காதலெனும் வெள்ளமெனை
நிர்க்கதியாய் ஆக்கியதே..
சாதல்தான் நன்றென்று
பைத்தியமாய் மாற்றியதே!!!

1 comment:

J.Junaid said...

உங்கள் "சாதல் நன்றே" உள்ளத்தை ஈர்த்து விட்டது...! காயங்கொண்ட இதயங்களிற்கெல்லாம் அக்கவிதை அருமருந்து.