Friday, August 10, 2012

தியாகத் திருநாள்!


ஹஜ்ஜுக்குச் செல்வதனால்
அல்லாஹ்வின் அருள்பெறலாம்
தூதர்கள் வழியதனை
தூயதாய்ச்; செய்திடலாம்!

இப்றாஹீம் நபியவர்தான்
இஸ்லாமிய லட்சியத்தால்
இனிதான புதல்வரையும்
இழந்திடத் துணிந்தனரே!

ஹாஜரா அம்மையும் தான்
அராபியப் பாலையிலே
வல்லவன் கட்டளையை
வாஞ்சையுடன் செய்தனரே!

சிறுகுழந்தை இஸ்மாயிலும்
சீர்குலைந்த இப்லீஸின்
சூழ்ச்சியை உணர்ந்துகொண்டு
உயிர்விட விரும்பினரே!

உடற்பலம் கரைந்தாலும்
உயிர்விட்டுப் பிரிந்தாலும்
கஃபாவைக் காணும் ஆவல்
மக்களை ஆள்கிறதே!

ஆட்டைப் பலிகொடுத்த
நிகழ்வதை நினைவுகொள்ள
குர்பான் வழக்கம் தான்
இன்றுவரை தொடர்கிறதே!!!

No comments: