Wednesday, November 21, 2012

இரத்தம் குடித்த காட்டேறி!

சிட்டாக விளையாடிக் கொண்டிருந்தது
பூக்காத சிறு மொட்டு..
அதனிடம் பூவைக் காட்டி
அழைத்துச் சென்றது
இரத்தம் குடிக்கும் காட்டேறி!

பூ முகத்தைப் பார்த்து
பூவைக்காட்டி மறைவுக்கு
இழுத்துச் சென்றது அந்த மிருகம்..

பின்..
காட்டேறியின் விலங்குணர்வுக்கு
கன்றுக்குட்டி இரையானது!

மிருகங்களைக் கொன்று
இரத்தம் குடித்த அந்த வெறியன்..
இறுதியில்
இரக்கமேயின்றி பாலகியை
பதம்பார்த்துவிட்டு
தலைமறைவானான்!

நரபலி கொடுக்கும்
மூட நம்பிக்கையில்
மூழ்கிப்போன தாயின்
மகனல்லவா இவன்?

அவனுக்கு
நோன்புடன் களைத்திருந்த
சிறுமியின் உயிர்
தேனாக இருந்திருக்குமோ?

அல்லாஹ்வே
அநியாயக் காரர்களுக்கு
நீயே போதுமானவன்
நீதியான தண்டணை வழங்க!!!

குறிப்பு - (2012.08.05 இல்  வெலிகமையில் ஒரு காமுகனால் கொலை செய்யப்பட்ட அப்ரா என்ற சிறுமிக்காக எழுதப்பட்டது)

No comments: