Wednesday, January 8, 2014

ஆயுள் கைதி

என் இதயம் எனும்
ஜன்னலினூடே
மின்னலாய் நுழைந்தவனே..

தென்றல் வீசிக் கொண்டிருந்த
என் உள்ளத்தில்
புயலை வீசச் செய்தவனே..

கனவில் நீ வந்து
என் கன்னத்தில்
இட்ட முத்தம்
இன்னும் ஈரலிப்பாகவே
இருக்கிறது தெரியுமா?

உன் மீது
நான் கொண்ட அன்பை
வார்த்தை கொண்டு
வெளிப்படுத்தத் தெரியாமல்
ஊமையாகி நிற்கிறேன்
இப்போது..!

உள்ளத்தில் எழும்
ஓசைகள் கூட
இயற்கையோடு கலந்துவிட்ட
குயிலின் கானம் போல
பயனில்லாமலேயே போய்விட்டது!

உன் பேச்சினாலே
என்னைச் சிறைப்பிடித்தவனே
அதில் ஆயுள் கைதியாய் இருக்கவே
ஆசைப்படுகின்றேன் எப்போதும்!

எனக்குள்
மாற்றங்களைத் தந்துவிட்டு
எதுவும் தெரியாதது போல்
எப்படித்தான் இருக்கின்றாயோ?

நீயில்லாத வாழ்வு
இங்கு கசக்கின்றது..
அதை எண்ணுகையில்தான்
என் மனது கனக்கிறது!!!

2 comments:

hafiba said...

hi.Rimza.I see ur poem aayul kaithy. it is fantastic

வெலிகம ரிம்ஸா முஹம்மத் said...

Lot of Thanks your Comments...