Monday, November 29, 2010

நிகரற்ற நாயனே!


யா அல்லாஹ்!
அலைகளின் நாதத்திலும்
உன் வல்லமையை
இனிதே காணுகிறேன்!

உள்ளத்தை அமைதிப்படுத்த
திக்ர் ஸலவாத்தை
அருமருந்தாய் அருளியவனே!

பொறுமையைக் கொண்டும்
தொழுகையைக் கொண்டும்
துஆ கேட்க வழி காட்டியவனே!

குயிலின் ராகத்திலும் - உன்
குத்ரத்தின் வலிமை தான்
துல்லியமாய் ஒலிக்கிறது..
உன் அருள் மழையால்
இவ்வுலகம் செழிக்கிறது!

நிகரற்ற நாயனே - உன்
நினைவுகளால் என்
கல்பின் பக்கங்களை
நிதமும் சுத்தமாக்குகிறேன்!

கேளிக்கை விளையாட்டை
குழிதோண்டி புதைக்கின்றேன்..
நபிவழியில் சென்று நானும்
நல்லவற்றை விதைக்கின்றேன்!

நான் பயணிக்க வேண்டியுள்ளேன்
இன்னும் தொலை தூரமும்..
தீயவற்றிலிருந்து
என்னைக் காத்திடு
எல்லா நேரமும்!!!

No comments: