Sunday, May 22, 2011

காலங்களின் பிடிக்குள்!


இளையவள் என்
வளையல் ஓசையில்
உன் இதயம்
சிக்கிக்கொண்டதாய்
சொன்னாய்!

நான் சிரிப்பதால் தான்
பறவைகள்
இறக்கை விரித்துப் பறப்பதாய்
சொன்னாய்!

அழகிய ரோசாவை
நட்டுவிடக்கூடிய
அழகிய இடம்
என் கன்னக்குழி என்றாய்!

இவற்றைக்கேட்டு
என் உள்ளம்
உன் ஞாபகங்களால்
நிறைந்துவிட்டது!

என் இதயப் பூந்தோட்டத்தில்
பூக்கள் நிறையவே
பூக்கத் தொடங்கின!

உன் அன்பால் கட்டுண்டுதான்
போனேன் நானும்!

எனினும்..
பணத்துக்கு ஆசைப்பட்ட நீ
கொழுத்த சீதனம் தின்று
பங்களா வீட்டின் எசமான்
என்ற பெயரில்
வேலைக்காரனானாய்!!!

1 comment:

F.NIHAZA said...

அருமையான வரிகள்....