Sunday, May 22, 2011

ஒப்பனைகள்!


வாக்குறுதியின்
மகிமை தெரியாதவர்களெல்லாம்
மேடைகளில்
வாக்குறுதிகளை
அள்ளி வீசுகிறார்கள்!

மனிதநேயம்
துளியுமற்றவர்களெல்லாம்
அதைப்பற்றி
கதைகதையாய்ப்
பேசுகிறார்கள்!

ஏழைகளைப் பார்த்து
நக்கலாக சிரிக்குமவர்கள்
தம் முன்னைய
வாழ்க்கையைப்பற்றி
சிந்திக்கவேயில்லை!

அகம்பாவத்தை
அகம் முழுவதும் சுமந்துகொண்டு
ஆன்மீகம் பேசுவது
வேடிக்கையாக இருக்கிறது!

மனிதத்தனமற்று
நடக்குமவர்கள்
மகான் என்று
தன்னை சொல்லிக்கொள்வதும்
வாடிக்கையாக இருக்கிறது!

அவர்களின்
முகத்திற்கும் அகத்திற்கும்
சம்பந்தமேயில்லாத பின்
ஒப்பனைகள் மட்டும் எதற்கு
அகற்றி விடட்டும்!!!


வாக்குறுதியின்
மகிமை தெரியாதவர்களெல்லாம்
மேடைகளில்
வாக்குறுதிகளை
அள்ளி வீசுகிறார்கள்!

மனிதநேயம்
துளியுமற்றவர்களெல்லாம்
அதைப்பற்றி
கதைகதையாய்ப்
பேசுகிறார்கள்!

ஏழைகளைப் பார்த்து
நக்கலாக சிரிக்குமவர்கள்
தம் முன்னைய
வாழ்க்கையைப்பற்றி
சிந்திக்கவேயில்லை!

அகம்பாவத்தை
அகம் முழுவதும் சுமந்துகொண்டு
ஆன்மீகம் பேசுவது
வேடிக்கையாக இருக்கிறது!

மனிதத்தனமற்று
நடக்குமவர்கள்
மகான் என்று
தன்னை சொல்லிக்கொள்வதும்
வாடிக்கையாக இருக்கிறது!

அவர்களின்
முகத்திற்கும் அகத்திற்கும்
சம்பந்தமேயில்லாத பின்
ஒப்பனைகள் மட்டும் எதற்கு
அகற்றி விடட்டும்!!!

No comments: