Sunday, May 22, 2011

வாழ்க்கை பூங்காற்று!


உலகத்தின்
உறக்கத்தில் உண்மையும்
அமைதியாக
சயனித்துக் கிடக்கிறது!
பொய்யோ..
விழித்துக்கொண்டு
ஆர்ப்பாட்டம் புரிகிறது!

துயரங்கள் எங்கும்
பரவிக்கிடக்கிறது..
சந்தோஷங்களோ
சற்றும் அசைவின்றி
சமாதியாகி விடுகின்றது!

பூஞ்சோலையாக
மலர வேண்டிய வாழ்க்கை..
தகிக்கும் பாலையாக
நகர்ந்து செல்கிறது!

படுக்கையில் கடித்துவிடும்
மூட்டைப் பூச்சிகளாய்
துன்பங்கள் என்
தூக்கம் தின்கிறது!

பாறைகளுடன் நான்
சண்டையிட்டிருக்கிறேன் - என்
இதயக்குமுறல்கள்
இந்த உலகில்
எதிரொலிக்கவே இல்லை என்று!

ஆனால்
பூங்காற்று மட்டும் வந்து
என் காதுகளில்
ரகசியம் சொன்னது
வாழ்க்கை வாழ்வதற்கே என்று!!!

No comments: