Friday, November 12, 2010

சொல்ல மறந்த சேதிகள்!


எல்லோரும் ஏன் என்னை
ஏளனமாய்ப் பார்க்கிறீர்கள்?
செய்வதெல்லாம் செய்துவிட்டு
என்னிடம் ஏன்
கேள்வி கேட்கிறீர்கள்?

பொல்லாத வினைகள் என்னை
சுற்றுகின்றதாலா?
சொல்லாத சுமைகளிங்கே
விடாமல் பற்றுகின்றதாலா?

தேதிகள் தோறும்
நான் சொல்லாத சேதிகள்
தினமும் வதைப்பதாலா?

அந்தரப்பட்டுப்போன
வாழ்வியல் வழிமுறைகளை
நீங்களே சிதைப்பதாலா?

துன்பங்களே.. துயரங்களே..
உங்களுக்கு எத்தனை மு(ந)கங்கள்
என்னை கொடுமைப் படுத்துவதற்காய்?

இனிவரும் காலங்கள்
எனக்கு ஒளி தருமா?
வருடம் புதிதாய் பிறக்கையில்
வழி வருமா?

இத்தனை நாட்களாய்
இல்லை
இப்படியொரு மனத்துடிப்பு...
இப்போதுகளில்
இரவின் கணங்களில்
இதயத்தில் வெடிப்பு!

நிம்மதியற்று உறங்குகிறேன்
பல இரவுகள்...
அத்தனைக்கும் காரணம்
சுயநலமாய் பழகிய
சில உறவுகள்!!!

No comments: