Wednesday, November 24, 2010

விளையும் நினைவுகள்!


தினமும்
என் இதயம்
உன் உருவம் வரைகிறதே...
கணமும்
என் உடம்பு
உருக்குலைந்து போகிறதே!

நிதமும்
உன் நினைவு
இதமாய் இருக்கிறதே...
விடியும் முழு இரவும்
முடிவாய் தொலைகிறதே!

படியும்
உன் நினைவு
வடிவாய் பதிகிறதே...
களையும்
பல கனவு
விளையும் நினைவுகளே!

உயிராய்
உணர்வில் கலந்தவளே..
உள்ளத்தை
அன்பால் நனைத்தவளே..!

கற்பனைகளில்
கவிதைகள் கூறியவளே...
கனவுகளில் என்
கண்களைக் காட்டியவளே!

உணர்வுகளில்
உயிரைத் தேடியவளே..
எனக்கு
புது யுகம் காண
புத்தியும் கூறியவளே!

விரக்தியே வாழ்வாய்
வாழ்வே விரக்தியாய்
இருந்த எனக்கு
வாழ்க்கைக்கோர்
அர்த்தம்
சொல்லிக் கொடுத்தாய்
என் உயிரானவளே..!!!

No comments: