Sunday, November 28, 2010

இருகரம் ஏந்திடுங்கள்!


ஆன்மாவைக் கறைப்படுத்தி
அழுக்காக வாழ்வதா?
இஹ்லாஸை மறந்திங்கு
இன்பத்தில் வீழ்வதா?

இளைஞரே யுவதிகளே
இறை தியானம் மறக்காதீர்..
இறுதியில் சுவனம் புகும்
இனிய சந்தர்ப்பம் துறக்காதீர்!

அந்தகார இரவினிலே
அழுது துஆ புரிந்திடுங்கள்..
நிலையான வல்லோனின்
நிகரிலா அன்பை அறிந்திடுங்கள்!

ஒற்றுமையாய் கூட்டாக
தொழுகையை
நிறைவேற்றுங்கள்..
முஃமினாய் உங்களை
பறைசாற்றுங்கள்!

சண்டை சச்சரவுகளிலிருந்து
தூர செல்லுங்கள்..
அண்டை அயலாருடனும்
நட்பு கொள்ளுங்கள்!

இஸ்லாத்தின் கிளை பரப்ப
ஈமானின் ஒளி நிரப்ப..
இருகரம் ஏந்திடுங்கள்..
இறை நினைவில்
வாழ்ந்திடுங்கள்!!!


இஹ்லாஸ் - தூய எண்ணம்

No comments: