நம் சந்திப்புகள்
சந்தோஷத்தைத் தந்தது
என்னவோ மெய்தான்!
உன் உயர்வுக்கு நானும்
என் உயர்வுக்கு நீயுமாய்
ஏணியமைத்து
வெற்றி காண நினைத்ததும்
மெய்தான்!
கயவர்களின்
கரடுமுரடான வார்த்தையால்
காயப்பட்ட என் இதயம் - உன்
கருணை வார்த்தையாலும்
காரூண்ய செயற்பாட்டாலும்
கட்டியெழும்பியதும் மெய்தான்!
ஆனால்..
திடீரென்று
உதறிவிட்ட
உன் உதாசீனத்தால் - என்
உள்ளத்தை
முள்ளொன்று சதாவும்
தாக்குவதும் மெய்தான்!
என்னை அமைதிப்படுத்தும்
ஒவ்வொரு கணங்களிலும்
என் ஆன்மா
உன் போலிச் சிரிப்புகளால்
நினைவிழப்பதும்
மெய்தான்!!!
No comments:
Post a Comment