Wednesday, November 24, 2010

உயிர் வாழும் உன் சொந்தம்!


உன்னுடனான
அன்பு பற்றி கேட்டால்
உறுதியுடன் உயிர்வாழும்
உன் சொந்தம்
நான் என்பேன்!

உதவியாய் நீ
ஏதும் கேட்டால்
முகம் சுழிக்காமல்
முடிந்ததை செய்து
முகம் மலர்வேன்!

பூங்காவில்
உலா வரும்
பூங்;காற்றைக் கேள்..
உனை சுமக்கும்
என் இதயம் பற்றி
அது சொல்லும்!

ஆறுதல் கூறும்
என் வார்த்தையை
நீ கேட்டால்
மாறுதல் வரும்
உன் வாழ்வில்
புதுப்பொலிவு நோக்கி!

தேறுதல் என்
தேகத்தில் கூட நிகழும்
உன் அன்பு
மாறாதிருந்தால்!!!

No comments: