Thursday, November 17, 2011

பாராமுகம் ஏனோ?

மதியை இழக்கச்செய்து
விதியை மாற்றுகின்ற
வித்தைகளை - மனிதா
நீ விட்டுவிடு!

துணையாய்
அல்லாஹ்வை ஏற்று
இணையில்லா அவன் அருளை
குறைகளின்றி பெற்றுவிடு!

பொடுபோக்குத் தன்மை
களவு பொய்களை
மனிதா - நீ
இன்றே நீ மாற்றிவிடு!

ரஹ்மத் தரும் சட்டங்களை
மனமுவந்து மதித்து
படைத்தவன் திருநாமம்
என்றும் போற்றிவிடு!!!

No comments: