Thursday, November 17, 2011

காலத்தின் ஓலம்!


இருளின் போர்வைக்குள்
சிக்குப்பட்டுப்போன
சூரியனுக்கே
விடிந்தால்
விலாசம் வருது..

போரின் வடுக்களுக்குள்
அகப்பட்டுப் போன
மக்களுக்கு
எப்போது விலாசம் வரும்..?

அழகாய் கனவு காண
ஆசைப்படுகிறார்கள்;..
பாவம்..
நிம்மதியாய்
தூக்கம் வராமல்
அல்லல்படுகிறார்கள்!

வண்ணாத்திப் பூச்சியின்
வண்ணம் காண
தினமும் முனைகிறார்கள்..
ஆனால்..
காலுடைந்த சிட்டுக்குருவியாய்
கிடந்து அழுகிறார்கள்!

யுத்தம் முடிந்த ஈழ நாட்டில்
சத்தமில்லாப் பொழுது புலர்கிறது..
எனினும்
விலைவாசி ஏற்றம் கண்டு
உலைப் பானை காய்ந்து
உலர்கிறது!!!

No comments: