Thursday, November 17, 2011

எல்லாம் மாறிப் போச்சு!



அத்தியாவசியப் பொருட்களுக்கெல்லாம்
விலையென்பது மலையாய் ஆச்சு..
போரு முடிந்து காலம் மாறியும்
சோறுக்கு கஷ்டமாச்சு!

கடலையின் விலை கேட்டு
குடலும் தான் நடுங்கிப் போச்சு..
சுடலைக்குப் போகும் வரை
நிம்மதியே தொலைந்து போச்சு!

ஏழையின் உழைப்புக்கு
மதிப்புகள் இல்லாமலாச்சு..
சம்பளத்தைக் கூட்டிக் கேட்டு
வேலையும் தான் பறிபோச்சு!

மனிதர்களின் கைகலப்பு
சாதிகளின் சண்டையாச்சு..
பலரும் அதில் கலந்ததாலே
நம் நாடும் ரெண்டாய்ப் போச்சு!

பொன்னாடையும் பூமாலையும்
மேடைகளில் நிறைஞ்சு போச்சு..
ஆளுக்கு ஆள் மாலை போடும்
காலம் இப்போ மலிஞ்சு போச்சு!

காணி கார் பங்களா
காசும் சீதனம் ஆயாச்சு..
கன்னியர் வாழ்வு அதனால்
கானல் நீராய் போயாச்சு!!!

No comments: