Thursday, November 17, 2011

முரண்பாடுகள்!


நீ கடலில் முத்தெடுக்க
ஆசைப்படுகிறாய் - ஆனால்
மூச்சடக்க அச்சப்படுகிறாய்!

வெற்றிக் கம்பத்தைத் தொட
நினைக்கிறாய் - ஆனால்
தோல்விகளைத்
தாண்ட மறுக்கிறாய்!

உயரப் பறக்க கனவு
காண்கிறாய் - ஆனால்
இருந்த இடத்திலேயே
இருந்துகொள்கிறாய்!

வெளிச்சத்தை தேட
நினைக்கிறாய் - ஆனால்
இருளைக் கண்டு
அச்சப்படுகிறாய்!

பூப் பாதைகள்
வேண்டும் என்கிறாய் - ஆனால்
கற்களையும் முற்களையும்
கடக்க மறுக்கிறாய்!

இஷ்டம் போல வாழ
ஆசைகொள்கிறாய் - ஆனால்
கஷ்டப்பட்டு உழைக்க
மறுத்துவிடுகிறாய்!

தொழிலதிபராக
கனவு காண்கிறாய்
சிறிய நட்டங்களை
தாங்க பயப்படுகிறாய்!

அதிகாரம் பண்ண
ஆசைப்படுகிறாய் - ஆனால்
கட்டளைகளுக்கு அடிபணிய
மறுக்கிறாய்!

சிம்மாசனத்துக்காய்
பாடுபடுகிறாய் - ஆனால்
வறியோர் துயரைத்
துடைக்க மறுக்கிறாய்!!!

2 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

தட்டி யெழுப்பும் கருத்துரைக் கவிதை பாராட்டுகள்

Yogeswari said...

மிகவும் உண்மை