Thursday, November 17, 2011

என்ன வாழ்க்கை..?


வாழ்வின் வட்டம் சகதி நிலை..
வதிவிடமின்றி அகதி நிலை!
வீழ்ந்தனர் முதியோர் இல்லத்தில்
விடிவே இல்லை உள்ளத்தில்!

வாழ்வினைத்தானோ நாங்களெல்லாம்
உயிரை மட்டும் சுமந்தவராய்
பாழ்படும் பூமியில் வாழ்கின்றோம்..
படுதுயர் தன்னில் வீழ்கின்றோம்!

வெறிச்சோடும் வீதிகள் போல்
நிம்மதி இங்கு அழிகிறதே..
வேதனை என்னும் மேடையிலே
எங்கள் வாழ்வு கழிகிறதே..

செழிப்புடன் வாழ்ந்தோர் முகத்திலெல்லாம்
பட்டினித் துயர்தான் படர்கிறதே..
சூழ்ந்தது துன்பம் எமைச்சுற்றி
சுகமது உண்டோ வாழ்க்கையிலே???

No comments: