Saturday, September 20, 2008

மௌனத் துயரம்!

மலரும் தென்றலும்

உரையாடும் மௌன மொழியாக

மனத்துயரங்கள் கனத்து

கண்ணில் கரையும்!


காலம் தந்த சவுக்கடியால்

காயப்பட்ட இதய ரணங்கள்

கணத்துக்கு கணம்

கண்ணெதிரே கோலம் போடும்!


முட்டைக்கோதாய்

உடைந்து நொறுங்கிய

இதயச் சுவரில் ஒட்டியவாறு

நினைவுத் துலையில்

தோரணங்கள் ஆடும்!


தூரப்படாத துன்ப நினைவுகள்

தூக்கத்திலும் விழிப்பிலும்

தொடர்ந்து நின்று

மௌனத்துயரமாக பாழ்படும்!
----------------------------------
வெலிகம ரிம்ஸா முஹம்மத் (இலங்கை)

No comments: