Tuesday, September 23, 2008

எந்நாளோ

கண்ணின் பார்வையாய் -என்
கண்ணில் கலந்து விட்ட
கண்ணாளா –நீ
என்னைக் கரம் பிடிக்கும் நாள்
எந்நாளோ?

காலம் கனியும் வரை
கை முதலும் சேரும் வரை
காத்திருக்குமாறு
கூறினாய் அன்று.

காலம் கனிந்தும்
கை முதல் சேர்ந்தும்
காத்திருக்க வைக்கிறாய்
இன்று.?

நித்திரையில் வந்து
நித்தம்..நித்தம்
சித்திரவதை செய்கிறாய் என்னை?
சத்தியமாய்
சதாவும் நினைக்கிறேன் உன்னை?

தோப்புக்கு வருவேன் என்றாய்
தோதான செய்தியை
தருவேன் என்றாய்?
தேப்புப்பக்கம் வரவில்லை- நீ
தரிசனமும் தரவில்லை.?

பெரியதோர் இடத்தை
தெரிந்து விட்டாயோ?
பேதை என்னை நீயும்
பிரிந்து விட்டாயோ?

காத்திருப்பேன்…காத்திருப்பேன்
கண்ணாளா -நீ
என்னைக் கரம் பிடிக்கும் நாள்
எந்நாளோ?
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

No comments: