Tuesday, September 23, 2008

காத்திருப்பு

காலம் விதியின்
கைகளில் வரையறுக்கப்பட்டிருக்கிறது
காலச்சக்கரம்
வெகுவாய் சுழன்று கொண்டிருக்கிறது
பகல்களும் இரவுகளும்
நாளுக்கு நாள் கடக்கின்றன.

எனது நிமிடங்களை
எண்ணிப் பார்க்க இங்கு
எவருமில்லை
எனது சுவாசக் காற்றின்
கனத்தையளக்க இங்கு
யாருமில்லை.

யுகங்கள்
மலர்களைப்பேர்
மலர்ந்தும் உதிர்ந்தும்
போகின்றன.

நான் உனக்காக
எத்துனை காலம்
காத்திருப்பதென்பது?
எனக்கே தெரியாமல்
போகின்றன…
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

No comments: