Tuesday, September 23, 2008

தூய நட்பு

அன்பு நீர் அருவி பாயும்
இமயம்
ஆபத்தில் கை கொடுக்கும்
சமயம்
பாசத்தில் நனைய வைக்கும்
இதயம்
நேசத்தில் உருக வைக்கும்
அதிசயம்.

பலவேளை உணவளிக்கும்
கருணை
சில வேளை புத்தி சொல்லும்
உரிமை.

இக்காட்டில் வாரி வழங்கும்
வள்ளல்
உன்னைக் கண்டால் என் மனதிலோரு
துள்ளல்.

துன்பத்தில் சிலவேளை மனது
தளரும்
அப்போது நட்பின் ஆறுதல் வாய்
மலரும்.

பணம் பார்த்து
பழகுவதில்லை நட்பு
குணம் பார்த்து
பகிர்ந்து கொள்வதே நட்பு.

இன்பத்தில் மட்டும்
இணைவதல்ல நட்பு
துன்பத்தை
துடைப்பதே நட்பு..
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

No comments: