ஓ..இளைஞனே
உன்னை நீயே காயப்படுத்திக் கொண்டு
ஒரு மூலையில்
ஒதுங்கிக் கொண்டால்
வெற்றி வாய்ப்புக்கள்
விலாசம் தெரியாமல் போய்விடும்.
முட்களுக்கு மத்தியில்தான்
ரோஜாக்களின்
ராஜாங்கம் நடப்பது
உனக்குத் தெரியாதா என்ன?
முத்துக்குளிப்பவன்
மூச்சை அடக்கித்தான் ஆகவேண்டும்
இமய சிகரத்தை
எட்ட நினைப்பவன்
கடிமான பாறைகளைக்
கடந்துதான் தீர வேண்டும்.
நெஞ்சாரத் துணிவை வளர்த்து
நம்பிக்கை நீர் பாய்ச்சி
விடியலை நோக்கி விழித்தெழு
வானும் உனக்கு வசமாகும்.
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்
No comments:
Post a Comment