Tuesday, September 23, 2008

மௌனம் பேசியது

என்னவனே
நான் என்றும் உன்னவளே
நெஞ்சக்கூட்டில்
நின் நினைவுகளை வளர்த்து
நான் படும் வேதனை
உனக்குத் தெரியுமா?

அன்பே
அளவில்லா அன்பை
அனுதினம் உன் மீது பொழிந்துவிட்டு
நான் படும்
தவிப்பும் தாபமும்
இன்னுமா உனக்கு புரியவில்லை.?

அன்று
சாளத்தினூடே
உன் பூமுகம் கண்டேன்
ஒளி கண்ட தாமரையாய் நான்
உவகை கொண்டேன்.

உனக்கென நானும்
எனக்கென நீயுமாய்
உறவை வளர்த்து…
ஓன்றுக்கள் ஒன்றாகி
உருகி வடிகிறோம்…நாம்?

நீ பேபாகும் பாதையெல்லாம்
என் நினைவு
என் கண்கள் பேசும்
மௌன மொழி
இதய வீணை மீட்டும்
இனிய ராக மொழி
இன்னுமா புரியவில்லை உனக்கு?
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

No comments: