Tuesday, September 23, 2008

எனக்குள் உறங்கும் நீ

கற்பனை வளர்த்தேன்
கனவுலகில் மிதந்தேன்
காரியம் கை கூடக்
கடும் பிரயத்தனம் எடுத்தேன்.

ஆனால்
நான் அடியெடுத்து வைக்கும்
பாதையெல்லாம்
துன்பமும் துயரமும் என்னைத்
துரத்திக் கொண்டு வந்தன.

சாணஏற
முழஞ்சறுக்கும்
சறுக்கு மர ஏற்றமாக
என் வாழ்க்கை அமைந்து விட்டது
ஓயாத போராட்டத்தின் மத்தியில்
உள்ளம் சோர்ந்து
உருக்குலைகிறேன் நான்
எனக்குள் உறங்கும் நான்…
---------------------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹமத்

No comments: