Monday, May 4, 2009

தவிக்கும் பூவிதழ்

உனக்காக என் இதயம்
தினம் தோறும் தவிக்கிறது
உள்ளம் தான் அதனாலே
வெட்கம் விட்டு உரைக்கிறது

உன்னை தினம் எண்ணியே
என் வாலிபம் கழிகிறது
நீ காட்டும் அலட்சியத்தால்
உயிர் கசிந்து வழிகிறது



உன் பூமுகம் காணாவிடில்
பூக்களின் இதழ் கூட தவிக்கிறது..
பனித்துளி போல் என் விழிகள்
கண்ணீரை உதிர்க்கிறது!

No comments: