Monday, May 4, 2009

காதல் வளர்பிறை

இதயத்தை கவர்ந்தவனே!
உனை பற்றிய எண்ணம்
என் நெஞ்சமதில்
வளர்பிறையாய்

நித்திரை இன்றி
கழிகின்றன
பல இரவுகள்
உன் நினைவாய்

உனை கண்ட
முதல் நாளே இதயத்தை
தந்து விட்டேன்....

நீயின்றி நானில்லை
என்ற நிலைக்கு
வந்து விட்டேன்

இனியாவது
என் காதலை நீ
புரிந்து கொள்வாயா...
அல்லது....
தொடர்ந்து
உன் புறக்கணிப்பால்
பிரிந்து கொல்வாயா

No comments: