Monday, May 4, 2009

கண்ணாளனே!

என் இதயத்துள்
ஒரு பிரளயம்
மௌனமாக புரள
ஆரம்பிக்கிறது..
இப் பொற்கொடியாள்
துடிப்பதை நீ
அறிவாயா?

என் அன்பே!
என் அங்கத்தை
அணுஅணுவாக
வெட்டிச் சாய்த்துக் கேள்
ஒவ்வொன்றுமே
உன் நாமத்தை
உச்சரிக்கும்.

என் விழிகள்
நூறு கடிதங்கள் போட்டும்
ஏனோ இன்னும்
பதிலைக் காணோம்

சுவாலை விட்டெரியும்
பெரும் நெருப்பாகி விட்டது
என் காதல்....
அதில் நீ
குளிர் காயப் போவது
எப்போது?

2 comments:

Muruganandan M.K. said...

கவிதைகள் நன்றாக உள்ளன. வரும் 14.02.2010 நடைபெற உள்ள உங்கள் 'தென்றலின் வேகம்' நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.

Jaffer ALi said...

அன்பு சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களின் கவிதைகள் நன்றாக உள்ளன.தங்களது சில கவிதைகளை எங்களது குழுமத்தில்( தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்)வெளியிட தங்களின் அனுமதி தேவை
jaffermunaff@gmail.com