Monday, May 4, 2009

பொல்லாத காதல்

கல்லால்
இதயம் செதுக்கப்பட்ட
உனக்கு......- என்
காதல் துயர் விளங்குமா

என் உள்ளம்
ஓவென கதறி அழுகிறது..
கண்ணீர் துளியோ
இரத்தமாய் விழுகிறது

சம்மதம் சொல்லாமல்
கொல்லும் காதல்
பொல்லாதது...
அது
துயரங்களில்
ஈடு இணை இல்லாதது

உனை மனசில் நிரப்பி
காதல் சொல்லும் சுதந்திரத்தை
விட்டு வைத்தேன்...

ஆசை நாயகனே
உன்; கை பட ஏங்கும்
இக் காதல் ஓவியம்
உன் கண்களுக்கு
புலப்படவே இல்லையா?.

No comments: