Monday, May 4, 2009

எனை தீண்டும் மௌன முட்கள்.....

அமரத்துவம் பெற்று விட்ட
உன் மீதான காதல்.....
எனை இறக்கச் செய்து
உயிர் தருகிறது

காதலின் வாசமும்-இந்த
காரிகையின் நேசமும்-இக்
கவி வரிகளிலே
காண்பாய்

கருணையை வேண்டாதவன்
நீ என்ற படியால்...
காதலின் அவஸ்தை
உனக்கு தெரியாது தான்

குற்றமிழைத்தவள்
நானே தான்.......
உற்ற பெரும் காதலினால்
இதயத்தை தொலைத்தேனே

உடைந்த கண்ணாடியாய் மாறி
உள்ளத்தை கீறிச் செல்கிறது..
தெரியாமல் நீ
வீசிச் செல்லும் பார்வைகள்

ஏக்கத்தோடு மலர்ந்து
உனக்காக காத்திருக்க...
நீயோ மௌன முட்களால்
குத்தி வதைப்பது ஏன்

No comments: