Monday, May 4, 2009

நிலவே உனக்காக

ஒரு முறை திரும்பிப்
பார்த்தேன் என்று....
ஓராயிரம் முறை
மகிழ்வடைபவளே

மறைந்திருந்து நான்
நீ மறையும் வரை
பார்ப்பது...
உனக்கெங்கே
தெரியப் போகிறது

கழிந்து போகிற
ஒவ்வொரு நாளிலும்
சில|ரின் கண்வீச்சுகள் கூட
உனை
தாக்கிடக் கூடாதென்று
இதயம் புண்ணாகிக் கொண்டிருப்பவள்
நான்

நீ நல்லபடியாய் கற்கவும்
உன் கற்பனைகளை
கவிதையாய் விற்கவும்
ஆசை கொண்டிருப்பது ஒன்றும்
பொய்யல்லவே

தாயாய் நானிருந்து
தயவாய் பார்ப்பது.....
கைமாறு எதிர்பார்த்தென்று
கனவிலும் எண்ணாதே

படிக்க நீ வந்த நோக்கம்
தடைகளின்றி நிறைவு பெற
ஊக்கமாய் நானிருப்பேன்.....
என் தூக்கத்திலும் துணையிருப்பேன்!

No comments: