Monday, May 4, 2009

இன்றும் என் நினைவில் அவன்

ஏமாற்றத்தைச்
சந்திக்க விரும்பாத
இன்னல்களை
சகிக்கத் தெரியாத
அந்த டீன்ஏஜ் பருவத்திலே..
என் உள்ளத்தில்
காதலை விதைத்தவன்
அவன்.

இன்பத்தை
உணரத் துடிக்கும்
இனிமையை
நுகரத் துடிக்கும்
இளமையின் வாசலை
தட்டியவன் அவன்.

பசுமையான நினைவுகளை
ஏந்தி வந்து
வசந்த காலத் தென்றலாக
என் இதயமெங்கும்
வியாபித்தவன்
அவன்.

காலத்தால்
அழிக்க முடியாத
மீண்டும்
திரும்பி வர முடியாத
மனதில்
பட்டாம்பூச்சி சிறகடித்த
அந்த........
கல்லூரிக் காலத்து
காதலன் அவன்!

No comments: