Thursday, June 28, 2012

கவிதைகளோடு மாத்திரம்!


கடல் தாண்டிச் சென்ற
உன் பிரிவு தாளாமல்
நான் சந்தோஷமின்றியிருக்கிறேன்..

உன் அருகில் இருந்தபோது
நிகழ்காலத்தின் நிம்மதி
உணர்ந்திருக்கிறேன்..

உனதான
அன்புப் பறிமாற்றங்களால்
எத்தனை முறை
மகிழ்ச்சியிலாழ்த்தியிருக்கிறாய்!

எனைப் பிரிந்த உன் வாழ்வு
எப்படிக் கழிகிறதோ..
கழிவிரக்கம் இல்லாமல்
காலம்தான் கழிகிறதோ?

கனவோடும் கற்பனையோடும்
காத்திருக்கும் - என்
காலம் பற்றி உன்னிடம்
காற்று சொல்லவில்லையா?

உன் கை கோர்த்து
நான் நடந்த கடற்கரையும்
நான் தனியாயழுவதைக்கண்டு
துயருருகிறதே..

கடல் நுரை..
பறவைக் கூட்டங்கள்..
குயிலின் நாதம்..
எதுவுமே மகிழ்ச்சி தரவில்லை!

உன் காதலோடு
நான் வாழ்வதால்
கவிதைகளோடு மாத்திரம்
கலந்துறவாடுகிறேன்!!!

No comments: