என் இதயம்
வடிக்கும் கண்ணீரை
உன்னால்
பார்க்க முடியுமா?
தளுதளுக்கும்
என் குரலை
உன்னால்
கேட்க முடியுமா?
நீ அருகேயிருந்தால்
துன்பங்கள் கிட்டவர
அச்சம் கொள்ளும்..
நீ தூரப்போனால்
அவை என்னை
ஆக்கிரமித்துக் கொல்லும்!
என்னைக் குருவி குருவி என்று
கூப்பிடுவாயே..
இப்போது இந்தக் குருவியின்
சிறகுகள் எரிந்து
பொசுங்கிவிட்டன!
உன்னுடன் என்னால்
உயரப் பறக்க முடியவில்லை..
உனை மறந்து
தனியாய் பறக்கவும் இயலவில்லை!
பழி சொல்லும் இந்த உலகில்
வாழவே அச்சப்படுகிறேன்..
எனக்கொரு
வழி சொல்லிவிடு!
வதைத்தது போதும்
வந்தென்னை
வாழ வைத்துவிடு!!!
No comments:
Post a Comment