Thursday, June 28, 2012

தோல்வி!


மனிதனைப்
புடம்போட்டு
புதிதாக
பிறக்க வைக்கிறாய்!

நீதான் எம் ஆசிரியன்..
வாழ்க்கைப் பாடங்களை
கற்றுத் தருகிறாய்!

நீ முதலில் தருவது
கவலைகளையல்ல
சந்தோஷத்தின்
படிக்கற்களை!

விழுந்து எழுந்தால்தானே
வெற்றி கிடைக்கும்?
தானாய் வந்தால் அது
மதிப்பை இழக்கும்!

கண்ணீரில் மூழ்கியவன்தான்
சிரிப்பின் தாற்பரியத்தை
அறிந்தவன்!

போராட்டம்தான்
இன்ப நீரூற்றின்
அத்திவாரம்!!!

No comments: