வேதனையின் வலியால்
துடிக்கிறாயா?
கலங்காதே.. நிச்சயமாய்
உனக்கொரு வழி பிறக்கும்!
கவலைகளை உன்னுடன்
காவிச் செல்லாதே..
அவை உன்
செல்போன் அல்லவே?
சிகரம் தொட நினைக்கும் நீ
சின்ன குறைகளுக்கும்
மனம் தளரலாமா?
பகலும் இரவும்
இல்லையெனில்
நாட்கள் எப்படி நகரும்?
இன்பமும் துன்பமும்
இணைந்ததே மனித வாழ்க்கை..
இது இயற்கையின் நியதி!
ஒளிக்குப் பெறுமதி
இருப்பது போலவே
இருளுக்கும் பெறுமதியுண்டு!
இனிப்பை மாத்திரம்
நீ விரும்பினால்
மாத்திரைகளால்
உன் நோய் சுகமாவதெப்படி?
அஸ்தமனத்துக்குப்
பிறகுதான்
உதயம் என்பதை
மறக்கலாமா?
விதைகளை நட்டால்தானே
விருட்சங்களை
எதிர்பார்க்க முடியும்?
துன்பங்களில் நீ
சிக்கியிருப்பதாய் துவண்டுவிடாதே..
உனக்காக சிம்மாசனம்
காத்திருக்கிறது வெற்றியோடு!
இயற்கையில் இல்லை பிளவு..
இரண்டும் இணைந்ததே வாழ்வு!!!
No comments:
Post a Comment